ராசி விருஷங்கள்
பின்வருவன நவக்கிரக விருக்ஷங்கள்.
நவக்கிரக விருக்ஷங்கள்
சூரியன் - எருக்கு
சந்திரன் - பலாசு (பலா மரம் அல்ல)
செவ்வாய் - கருங்காலி
புதன் - நாயுருவி
குரு - அரசு
சுக்கிரன் - அத்தி
சனி - வன்னி
ராகு - அருகம்புல்
கேது - தர்ப்பைப் புல்
ஒருவர் சிம்ம லக்னமாகவோ அல்லது சிம்ம ராசியாகவோ இருந்தால் அவர்கள் பின்வரும் ராசி விருக்ஷங்களை நட்டு பராமரித்து நற்பலன்களை அடையலாம்.
ராசி விருக்ஷங்கள்
மேஷம் - செஞ்சந்தனம்(சந்தன வேங்கை )
ரிஷபம் - ஏழிலைப்பாலை
மிதுனம் - பலா
கடகம் - பலாசு (பலா மரம் அல்ல)
சிம்மம் - இலந்தை
கன்னி - மாமரம்
துலாம் - வகுளம்
விருச்சிகம் - கருங்காலி
தனுசு - அரசு
மகரம் - தோதகத்தி
கும்பம் - வன்னி
மீனம் - ஆல மரம்
நாம் அனைவரும் சப்த ரிஷிகளை வழிகாட்டிகளாகக் கொண்டு நம் வாழ்வை அமைத்துக்கொண்டவர்களே . குறிப்பிட்ட ரிஷியை வழிகாட்டியாகக் கொண்டவர்கள் அக்குறிப்பிட்ட ரிஷியின் கோத்திரத்தைச் சார்ந்தவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். ஒருவர் எந்த ரிஷி கோத்திரத்தைச் சார்ந்தவரோ அந்த ரிஷிக்குரிய விருஷத்தை நட்டு பராமரித்து வரவேண்டும்.
சப்த ரிஷிகளுக்கான மரங்கள்
காஷ்யபர் - கிருஷ்ண துளசி
அத்ரி - அகத்தி
பரத்வாஜர் - நாயுருவி
விஸ்வாமித்திரர் - வில்வம்
கௌதமர் - ஊமத்தை
ஜமதங்கி - அறுகம்புல்
வசிஷ்டர் - வன்னி மரம்
பஞ்ச பூதங்களால் ஆனதே இந்த பிரபஞ்சமும் அதில் அமைந்த அனைத்தும். பஞ்ச பூத வடிவங்களை கோவில்களுக்குச் சென்று வழிபடுவது ஒரு முறை. மற்றொரு முறை அவற்றிற்கான விருக்ஷங்களை நட்டு பராமரித்து வருவது.
பஞ்சபூத விருக்ஷங்கள்
ஆகாயம் -சிவன் - வில்வம்
நீர் -விஷ்ணு – துளசி
நெருப்பு -சூரியன் – அரளி
பூமி -விநாயகர் - அருகம்புல்
வாயு -அம்பிகை – சங்கு புஷ்பம்
ஒரு குறிப்பிட்ட அம்சத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட விருக்ஷங்களை குறிப்பிட்டிருப்பார்கள். அதுபற்றி வாசகர்கள் குழம்பிக்கொள்ள வேண்டாம். ஏனெனில் மேற்குறிப்பிட்டுள்ள விருக்ஷங்களுக்கு உப விருக்ஷங்கள் மற்றும் மாற்று (alternative) விருக்ஷங்களையும் நமது முனிவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவை இங்கு குறிப்பிடப்படவில்லை என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக